வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு பகுதியில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திலும் குறித்த கடற்பரப்புகளில் 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திலும் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)