ஆசியா

தைவானில் கரப்பான்பூச்சியால் நேர்ந்த கோர விபத்து

தைவானில் கரப்பான்பூச்சியால் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

தைவானில் கார் ஓட்டிக் கொண்டிருந்த நபர் மீது கரப்பான்பூச்சி விழுந்ததால் விபத்து நேர்ந்துள்ளது.

கரப்பான்பூச்சியைப் பார்த்து பயந்துபோன அவர் கட்டுப்பாட்டை இழந்து தமது Mercedes-Benz சொகுசுக் காரை வேலி மீது மோதியதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் அந்த 42 வயது நபருக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் மதுபானம் அருந்தவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.

விபத்தின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. இணையவாசிகளில் பலர் அவரது சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினர்.

“இப்படித்தான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது என் தலைக்கவசத்தின் மீது கரப்பான்பூச்சி ஊர்ந்துசென்றது” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

“கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது குளவி ஒன்று சன்னல் வழியாகப் பறந்துவந்ததால் பதற்றம் அடைந்தேன்” என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!