உலகம் செய்தி

கென்யாவிற்கான பயணத்தை ரத்து செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்

  • November 10, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில்(South Africa) நடைபெறவிருந்த ஜி20 உச்சிமாநாட்டிற்கான தனது பயணத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) ரத்து செய்ததை அடுத்து, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த கென்யாவுக்கான(Kenya) பயணத்தை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்(J.D. Vance) ரத்து செய்துள்ளதாக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22 முதல் 23 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, ஆப்பிரிக்காவில் வாஷிங்டனின்(Washington) நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு வான்ஸ் செல்ல […]

உலகம் செய்தி

ஈக்வடார்(Ecuador) சிறைச்சாலை கலவரம் – 31 பேர் உயிரிழப்பு(Update)

  • November 10, 2025
  • 0 Comments

ஈக்வடாரின்(Ecuador) எல் ஓரோ(El Oro) மாகாணத்தில் உள்ள மச்சாலா((Machala)) சிறையில் நடந்த ஆயுத மோதலில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் 27 கைதிகள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கலவரத்தில் 33 கைதிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் மோதலுக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுக்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி ஈக்வடார் (Ecuador) சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்! பலர் […]

உலகம் செய்தி

டெக்சாஸில் சக ஊழியர்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளைஞன்

  • November 10, 2025
  • 0 Comments

டெக்சாஸின்(Texas) சான் அன்டோனியோவில்(San Antonio) 21 வயது இளைஞர் ஒருவர் மூன்று சக ஊழியர்களைச் சுட்டுக் கொன்று, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததாக சான் அன்டோனியோ காவல் துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டதாக […]

உலகம் செய்தி

நேபாளத்தில் காணாமல் போன இரு இந்தியர்களின் சடலங்கள் மீட்பு

  • November 10, 2025
  • 0 Comments

நேபாளத்தில்(Nepal) மலையேற்றப் பயணத்தின் போது அக்டோபர் 20 முதல் காணாமல் போன இரண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் மனாங்(Manang) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாரங்களாக தேடுதலுக்குப் பிறகு இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 52 வயதான ஜிக்னேஷ் குமார் லல்லுபாய் படேல்(Jignesh Kumar Lallubhai Patel) மற்றும் அவரது 17 வயது மகள் பிரியான்சா குமாரி படேல்(Priyansa Kumari Patel) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடும் […]

உலகம் செய்தி

மாலியில் தூக்கிலிடப்பட்ட இளம் டிக்டாக் பிரபலம்

  • November 10, 2025
  • 0 Comments

மாலியின்(Mali) டோங்காவைச்(Tonga) சேர்ந்த இளம் டிக்டாக் பிரபலம் மரியம் சிஸ்ஸே(Mariam Cisse) ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், மரியம் சிஸ்ஸேவின் அதிர்ச்சியூட்டும் மரணம் இணையத்தில் சுதந்திரமாகப் பேசுபவர்களுக்கு வடக்கு மாலியில் வாழ்க்கை ஆபத்தாக மாறியுள்ளது. மாலியின் டிம்பக்டு(Timbuktu) பகுதியில் உள்ள டோங்கா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மரியம் சிஸ்ஸே டிக்டாக்கில் கிட்டத்தட்ட 90,000 பின்தொடர்பவர்கள் கொண்டவர். அங்கு அவர் தனது அன்றாட வாழ்க்கை, சமையல், நடனம் மற்றும் மாலி ராணுவ வீரர்களுக்கு ஆதரவைக் […]

இந்தியா செய்தி

டெல்லி குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உயிருள்ள தோட்டா கண்டுபிடிப்பு

  • November 10, 2025
  • 0 Comments

டெல்லியின் செங்கோட்டை அருகே இன்று ஒரு காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ஒரு உயிருள்ள தோட்டா கன்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு காவல்படை (NSG) புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் உயிரிழந்த 23 வயது ஆந்திர மாணவி

  • November 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில்(Texas) உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில்(Andhra) வசிக்கும் ராஜி எனும் ராஜ்யலட்சுமி யார்லகடா(Rajyalakshmi Yarlagadda) என்ற மாணவி சமீபத்தில் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம்-கார்பஸ் கிறிஸ்டியில்(Texas A&M University-Corpus Christi) பட்டம் பெற்று அமெரிக்காவில் வேலை தேடி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக அவர் கடுமையான இருமல் மற்றும் மார்பு வலியால் அவதிப்பட்டு வந்தார் என்று ராஜ்யலட்சுமி யார்லகடாவின் உறவினர் சைதன்யா […]

உலகம் செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களை சுரண்டும் மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம்!

  • November 10, 2025
  • 0 Comments

மலேசிய நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட சுமார் 100 வங்காளதேசத் தொழிலாளர்கள் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் (Dhaka) உள்ள வெளிநாட்டினர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊதியம் வழங்கப்படாமை,  நியாயமான இழப்பீடு மற்றும் மலேசிய முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறி அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். மலேசியாவின் பிரபல நிறுவனமொன்றில் ஏறக்குறைய 431 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனங்கள் இழப்பீடு வழங்க […]

இலங்கை

இலங்கையர்களிடையே அதிகரித்து வரும் நோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • November 10, 2025
  • 0 Comments

கண் பார்வையை சிதைக்கும்  கெரடோகோனஸ் (Keratoconus) நோய் இலங்கையர்கள் இடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. கார்னியா (Cornea) அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் டாக்டர் குசும் ரத்னாயக்க இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் அரிதாகக் கருதப்பட்ட இந்த நிலை இப்போது எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கூட அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அளவில் இதுவரை எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்றாலும், பெரும்பாலான நோயாளிகள் 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் […]

செய்தி

(update) தலாவ பேருந்து விபத்து தொடர்பில் சாரதி கைது!

  • November 10, 2025
  • 0 Comments

அனுராதபுரம், தலாவையில் இன்று காலை நடந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 16 வயதுடைய சாதாரணதர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 39 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் தலாவ ஹங்குரங்கெத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவரின் உடல் அனுராதபுரம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!