உலகம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • July 10, 2023
  • 0 Comments

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிசெய்துள்ளது. இவ் நிலநடுக்கம் நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின்படி,கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.மேலும் உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் […]

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரம்! பக்தர்களுக்காக திறக்கப்பவுள்ள கோயில் சன்னதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளதன்படி, ஜனவரி 2024 க்குள் ராமர் கோவில் சன்னதி பக்தர்களுக்கு திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர்களின் எண்ணிக்கையை 550 லிருந்து 1,600 ஆக அதிகரித்துள்ளது. 18 மணி நேர ஷிப்ட் முறையில் செய்து வந்த பணி தற்போது இரவு பகலாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) விழாவில் ராமர் சிலை […]

பொழுதுபோக்கு

காருக்குள் 2 மணி நேரம் பாவனா அனுபவித்த மரண வேதனை! திடுக்கிடும் உண்மை

  • July 10, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வலம் வந்தவர் நடிகை பாவனா. இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர். மேலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மலையாள நடிகர் திலீப்புக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததை நடிகை பாவனா திலீப்பின் மனைவியான மஞ்சுவாரியரிடம் சொல்லிவிட்டார். இதனால் பாவனாவை திலீப் காருக்குள் மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். அந்த சம்பவம் அப்போது இந்தியாவையே உலுக்கியது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய பாவனா, “நான் எத்தனையோ நடு […]

இலங்கை ஐரோப்பா

பிரித்தானியாவின் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்!

  • July 10, 2023
  • 0 Comments

பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் 50Km விட்டம் கொண்ட எரிமலை கிரனைட் பாறை கண்டுபிடிப்பு

  • July 10, 2023
  • 0 Comments

நிலவில் புதைந்துள்ள 50கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளர். மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீக்குழம்புகள் குளிர்ச்சியடைந்து இந்த பாறை உர்வாகியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்ற்கை கோள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மற்ற பாறைகளுடன் ஒப்பிடும்போது , கிரனைட் பாறையில் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் செறிவு அதிகம் உள்ளதாக […]

ஐரோப்பா

கோடிக்கணக்கில் பணம்..பதிலுக்கு ஆபாச படங்கள்; சர்ச்சையில்சிக்கிய BBC செய்தி நிறுவனம்

  • July 10, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் உள்ள BBC செய்தி சேனல் ஊழியர், நபர் ஒருவருக்கு அவருடைய 17 வயதில் இருந்து, 3 ஆண்டுகளாக 1கோடி 39 லட்சம் வரை பணம் கொடுத்து அதற்கு பதிலாக, ஆபாச படங்களை பெற்று வந்த விவகாரம் தெரிய வந்து உள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர் கூறும்போது, ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்த கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி BBC இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். […]

இலங்கை

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து – சாரதி கைது!

  • July 10, 2023
  • 0 Comments

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி இன்று (07.10) கைது செய்யப்பட்டுள்ளார். பொலனறுவையில் இருந்து பயணித்த பேருந்தொன்று மன்னம்பிட்டிய இடத்தில் உள்ள கொத்தலிய ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாற்பதிற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிக வேகம் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக பேருந்தின் சாரதிக்கு   ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காக […]

பொழுதுபோக்கு

கெத்தா ரிலீஸ் ஆனது ஷாருக்கானின் ஜவான் Prevue வெளியானது….

  • July 10, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Welcome to the […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்த மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகசாம் நிறைவு!

  • July 10, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்தது. எனினும்  பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 9 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதுவரை சுமார் 12000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை

இலங்கையை உலுக்கிய விபத்து – கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு

  • July 10, 2023
  • 0 Comments

கதுருவெல, மனம்பிடிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, […]

error: Content is protected !!