சரிவடையும் அபாயத்தில் உள்ள கருங்கடல் தானிய ஒப்பந்தம்!
கருங்கடல் தானிய ஒப்பந்தம் சரிவடையும் அபாயத்தில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் வெளியறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதிக்கான தடைகள் குறித்து ஐ.நாவுடன் உடன்படிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், கருங்கடல் தானிய ஒப்பந்தம் செயல்படாது எனக் கூறினார். கடந்த ஆண்டு ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடைகள் நீட்டிக்கப்பட்டால், அதை சமாளிக்க ஐ.நா உதவ வேண்டும். இதற்காக ஐ.நாவுடன் உடன்பாடு […]













