கொழும்பு – மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி பலி!
மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன













