இலங்கை

இலங்கையில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்து – ஒருவர் பலி

  • August 21, 2025
  • 0 Comments

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியபோது, ​​நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர். சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

இந்திய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

  • August 21, 2025
  • 0 Comments

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே இன்று சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு வெளியுறவு அமைச்சர்களின் இருதரப்பு சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் தங்கள் கலந்துரையாடல்களில் இருதரப்பு […]

வாழ்வியல்

அதிகரித்து வரும் தூக்க பிரச்சினைக்கு தீர்வு என்ன?

  • August 21, 2025
  • 0 Comments

தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான், உலகில் மன நிம்மதியுடன் வாழ்கிறவர்கள் என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று.இயற்கை உணவு ஒரு மனிதனுக்கு நாள்தோறும் 6 முதல் 7 மணி நேர தூக்கம் […]

இலங்கை

கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி – கடும் நெருக்கடியில் மக்கள்

  • August 21, 2025
  • 0 Comments

இராஜகிரிய – கொழும்பு வீதியில், டி.எஸ். சேனநாயக்க மாவத்தை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியதால், அப்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிக்கை ஒன்றைவௌியிட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, மாற்று வழிகள், மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் […]

உலகம்

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

  • August 21, 2025
  • 0 Comments

உலகின் சிறந்த நீதிபதி என அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணைய புற்றுநோயால் இறந்தபோது அவருக்கு 88 வயதாகின்றது. ரோட் தீவின் பிராவிடன்ஸில் முன்னாள் நீதிபதியான Frank Caprio, 1985 முதல் 2018 வரை பணியாற்றினார். அவரது அசாதாரண புரிதல், கருணை மற்றும் சட்டத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான திறனுக்காக அவர் பிரபலமானார். மனித நிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபருக்கும் உரிய மரியாதை அளித்தல், சட்டத்தின் நோக்கத்தை விளக்குதல், குற்றம் சாட்டப்பட்டவரின் சூழ்நிலைகளைக் […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான முதல் கட்டம் நடவடிக்கையில் இஸ்ரேல்

  • August 21, 2025
  • 0 Comments

காசாவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான தரைவழித் தாக்குதலின் முதல் கட்டத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, காசா நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சீ டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் ஏற்கனவே இராணுவ நடவடிக்கைகள் நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற 60,000 வீரர்களை அனுப்புவதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. சுமார் ஐந்து மாதங்களுக்குள் காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தாலும், அதை இன்னும் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அடிமைத்தனத்தின் கதைகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்கள் – கடும் கோபத்தில் டிரம்ப்

  • August 21, 2025
  • 0 Comments

அமெரிக்க அருங்காட்சியகங்கள் அடிமைத்தனத்தின் கதை மட்டும் முக்கியப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 17 அருங்காட்சியகங்களில், அமெரிக்காவின் இழிவான வரலாற்று பகுதிகள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களைத் தோற்கடிக்கும் வகையிலும், வெற்றிகளைக் கடந்து அமெரிக்காவின் சாதனைகள் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கறுப்பினத்தவர் வரலாற்றைச் சிறப்பிக்கும் எட்டு அருங்காட்சியகங்களில் உள்ள சில பிரிவுகள் மாற்றப்படலாம் என்ற வெள்ளை மாளிகையின் உள் அறிக்கை தொடர்பாகவும் சர்ச்சை […]

விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் இல்லை – கடும் கோபமடைந்த ஸ்ரீகாந்த்!

  • August 21, 2025
  • 0 Comments

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் முடிவை “அபத்தமானது” என்று விமர்சித்த அவர், ஷ்ரேயாஸின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் சாதனைகளை முன்னிறுத்தி தனது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார். இது குறித்து பேசிய அவர் “ஷ்ரேயாஸ் ஐயரை ஆசிய […]

இலங்கை

இலங்கையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

  • August 21, 2025
  • 0 Comments

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் […]

இலங்கை

இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம் – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

  • August 21, 2025
  • 0 Comments

நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திருமணத்திற்குத் தயாராக உள்ளவையாகவும், நிலையான வீட்டு வசதி இல்லாதவராகவும் அடையாளம் காணப்பட்ட இளைஞர் யுவதிகளுக்குத் தலா ஒரு மில்லியன் நிதியுதவி வழங்க 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 2015.06.30க்கு […]

error: Content is protected !!