இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர் – வைத்தியசாலையில் அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் ரக போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைதான வெளிநாட்டுப் பிரஜை தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது வயிற்றில் மேலும் கொக்கெய்ன் வில்லைகள் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிவதற்காக அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் ரக போதைப்பொருளைக் கடத்தி வந்த வெளிநாட்டு பிரஜையொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரைச் சுங்கப் பகுதியில் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த அதிகாரிகள், அவரது வயிற்றுக்குள் போதைப்பொருள் அடங்கிய வில்லைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது வயிற்றிலிருந்து 56 கொக்கேய்ன் ரக போதைப்பொருள் வில்லைகள் மீட்கப்பட்டன.

சியேரா லியோனைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை