ஆசியா

வியட்நாமில் மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

வியட்நாமில் மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி சாப்ஸ்டிக்ஸ் அவரது மூக்கு வழியாக நுழைந்து மூளையை அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு வியட்நாமில் குடித்துக்கொண்டிருந்தபோது சண்டையில் ஈடுபட்டதாகவும், சண்டையின் போது சாப்ஸ்டிக்ஸ் குச்சியால் மூக்கில் குத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவர்கள் மூக்கு வழியாக மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர்கள் வெற்றிகரமாக சாப்ஸ்டிக்குகளை அகற்றினர்.

அதனை தொடர்ந்து, மூளை மற்றும் முதுகுத் தண்டு திசுக்களில் உள்ள தமனி மற்றும் நரம்புக்கு இடையே உள்ள ஃபிஸ்துலாவை மூட மைக்ரோ சர்ஜரி செய்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்