Site icon Tamil News

பன்றி இறைச்சி சாப்பிட்டால் நிபா வைரஸ் வருமா?

பன்றி இறைச்சியை உண்பதால் இந்நாட்டில் நிபா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என கால்நடை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று (05) விவசாய அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இலங்கைக்குள் நுழையும் அபாயம் இல்லை என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் இலங்கையில் இதுவரை பதிவாகாததாலும், நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் கடுமையாக அமுல்படுத்தி வருவதாலும் இந்த வைரஸ் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கால்நடை திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பன்றிகள், அவற்றின் திசுக்கள், உடல் திரவங்கள் மற்றும் மலம் ஆகியவற்றுடன் பாதுகாப்பற்ற தொடர்பு மூலம் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version