Site icon Tamil News

மாடு பிடி வீரருக்கு ஒரு கிலோ தங்கமா..?

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாந்த்தம் புதுப்பட்டி பெரிய கருப்பர் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை திருச்சி மதுரை ராமநாதபுரம் சிவகங்கை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

சுமார் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் என ஆறு சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தும் துள்ளி குதித்தும் வரும் காளைகளை ஆர்வமுடன் அடக்கி வரும் வீரர்களுக்கு மற்றும் வீரர்கள் பிடியில் சிக்காமல் துள்ளிக் குடித்து ஓடும் காளைகளுக்கும் கட்டில், அண்டா, குக்கர், சேர், டைனிங் டேபிள், தங்கம் மற்றும் வெள்ளி காசு உள்ளிட்டவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிய ரசித்து வருகின்றனர்.

Exit mobile version