இலங்கை

மன்னாரில் நடன துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக பிரம்மாண்ட பயிற்சிப்பட்டறை

நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன பயிற்சி பட்டறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் மன்னார் வங்காலை டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரியில் இடம் பெற்றது.

மன்னார் டான்ஸிங் டைம்மன்ஸ் பயிற்சி கல்லூரியின் ஒழுங்கமைப்பில் அதன் நிறுவனர் அர்ஜுன் லெம்பேட்,ரஞ்சித்,நிருஸி,எவரஸ்ரா ஆகிய நடன ஆசிரியர்கள் இணைந்து குறித்த நடன பயிற்சி பட்டறையை நடத்தியிருந்தனர்

மன்னார் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 மேற்பட்டவர்கள் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்

Western, Classical, Folk ஆகிய நடனங்களுக்கான பயிற்சிகள் மேற்படி பயிற்சி பட்டறை ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பிராந்தியங்களில் குறித்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!