இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் 40 பேரின் உயிரை காப்பாற்றிய நிலையில் உயிர்விட்ட சாரதி

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர் இரவு 8.15 மணியளவில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதால் பயணிகள் உயிர் தப்பியதாக இகினியாகல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த பேருந்து அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் பேருந்து புறப்பட்டது.

சாரதிக்கு ஏற்பட்ட சில சுகயீனம் காரணமாக இகினியாகல பாடசாலைக்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்த வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்னார். வேறு சாரதிகள் இல்லை என்று கூறி பேருந்தை கொழும்பு நோக்கி ஓட்டிச் செல்ல ஆரம்பித்து 10 மைல் தூரம் சென்ற போதே பேருந்து வீதியை விட்டு விலகியுள்ளது.

பின்னர், சாரதி உடனடியாக கிண்ணியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்க்ள தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாக பேருந்தின் நடத்துனர் தாரக நுவன் தெரிவித்தார்.

பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மஞ்சுள பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content