செங்கடலில் கப்பல் தாக்குதல் – ஐரோப்பியப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம்

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அந்தந்த நாடுகளை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
செங்கடலின் பதற்ற நிலையால், நாடுகளின் பொருளியல் பாதிக்குமா, அத்தகைய பாதிப்புகளைக் கையாள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கேள்விகள் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
முக்கிய வணிக நிறுவனங்கள் வழக்கத்துக்கு மாறான நீண்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நிபுரணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெட்ரோலிய ரசாயனங்கள், சிறப்பு ரசாயனங்கள், கருவிகள் போன்றவை தருவிக்கப்படுவதில் நாடுகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
அண்மை நிலவரத்தால் பொருள்களைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இதுவரை நிலைமையைச் சமாளித்திருப்பதாக சில நாடுகள் தெரிவித்துள்ளன.
(Visited 20 times, 1 visits today)