செய்தி விளையாட்டு

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

2023 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மெஸ்சி 3வது முறையாக இந்த விருதை வெல்வதும் சிறப்பு.

கடந்த ஆண்டு, அவருக்கு 8வது முறையாக பலோன் டி’ஓர் விருது வழங்கப்பட்டது.

பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!