பொழுதுபோக்கு

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த தற்கொலை எண்ணம்… இறுதியில் என்ன நடந்தது?

கோலிவுட்டில் இளையராஜாவுக்கு எதிராக களமிறக்கிவிடப்பட்டவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை பிரமிக்கவைத்த இவர், அதன் பின் பல ஹிட் ஆல்பம் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா, “நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த மாதிரியான எண்ணம் தோன்றாது” என என்னிடம் கூறினார்’.

‘உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம்.

இந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்’ என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்