ஆசியா

மாலதீவில் அடுத்தடுத்து முடங்கிய அதிபர், அரசுத்துறை இணையப்பக்கங்கள் !

மாலத்தீவு அதிபரின் இணையதளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மாலத்தீவு. உலகின் மிகவும் தாழ்வான நாடு என்ற பெயர் மாலத்தீவுக்கு உண்டு. கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 5 மீட்டர் உயரத்தில் இந்த தீவு அமைந்துள்ளதால், சுற்றுலாத்துறையின் சொர்க்கபூமியாக உள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவே கைகொடுத்து வருகிறது.

கடந்த 196-ம் ஆண்டு மாலத்தீவுகளுக்கு பிரிட்டிஷ் அரசு விடுதலை அளித்தது. இதையடுத்து தற்போது மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பணியாற்றி வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில், மாலத்தீவு அதிபரின் இணையதளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு பொதுவெளிகளில் தங்களின் தகவலை பகிர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட அரசு இணையப் பக்கம்

அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அதிபர் மாளிகை இன்ஸ்டா பக்கத்தில், அதிபர் அலுவலக இணையதளம் தற்போது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டுள்ளது. இதை உடனடியாக சீர்செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது செயல்களைத் தீவிரப்படும் சீனா, தற்போது இலங்கையை கைவிட்டு மாலத்தீவு நோக்கி தனது பார்வையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாலத்தீவில் அரசு இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!