ஆசியா

சீனாவில் ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழ வியாபாரிக்கு எழுதி வைத்த முதியவர்…!

முதியவர் ஒருவர் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழ வியாபாரிக்கு எழுதி வைத்த நிலையில், அவரது உறவினர்கள் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமும் பழ வியாபாரிக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் ஷாங்காய் நகரில் வசித்து வந்த மா என்ற முதியவர் தனது வீட்டின் அருகே உள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மா வின் மகன் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர், அவரை லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.

முதியவருக்கு உறவினர்களும், சொந்தக்காரர்களும் இருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. முதியவர் இறக்கும் வரையிலும் லியூ தான் மகன் போல கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதியவர் மா உயிரிழந்தார். அதன்பிறகு அவர் எழுதி வைத்திருந்த உயிலை பார்த்தபோது தான் உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Fruit Seller Gifted Rs 3.8 Crore House By Customer

அதாவது மா, தனக்கு சொந்தமான ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை லியூ பெயரில் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து, பழ வியாபாரிக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதியவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

See also  பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் முயற்சி - சீனாவை குற்றம் சுமத்தும் தைவான்

ஆனால் 2020-ம் ஆண்டே முதியவர் தனது பெயருக்கு வீட்டை எழுதித்தந்துவிட்டதாக லியூ தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழக்கடை வியாபாரி பக்கமே நியாயம் இருப்பதாக கூறி உறவினர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content