பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் குறித்து நடிகை அம்மு அபிராமி ஆதங்கம்!

பலகோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம் என நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் ராட்சசன் போன்ற பல படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ள அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள ‘’ஜிகிரி தோஸ்த்து’’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான ’’கண்ணகி’’ படத்தில் அம்மு அபிராமி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியிருப்பது பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Ammu Abhirami Looks Fabulous And Lovely In Traditional Half Saree

“பலகோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம். பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் சிரமமாக உள்ளது. கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

பாத்ரூம் விஷயத்தை எப்படி சகித்து கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை. முடிந்தவரை ரெடிமேட் டாய்லெட் போன்றவற்றையாவது கட்டாயம் செயல்படுத்த வேண்டும். கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது.

பெரிய நடிகர்கள் – நடிகைகளுக்கு மட்டும் கேரவன் வைத்து கொடுக்கிறார்கள். ஆனால் வளரும் நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே” என பேசியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content