இலங்கை செய்தி

தலவத்துகொடையில் உள்ள வீதி உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு கடிதம்

தலவத்துகொட, கிம்புலாவல பகுதியில் அமைந்துள்ள வீதி உணவு விற்பனை நிலையங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் காலி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் எழுத்துமூல நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் தமது கடைகளை காலி செய்வதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மதுர விதான மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த கடைகளை முறையாக நடத்துமாறு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இருந்த போதிலும் மூன்றாவது தடவையாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை