இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளி பருவத்தின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி தொடங்கியது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)