இந்தியா

மாநில அரசால் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தொகுப்பில் கிடந்த பாம்பு!

அரசு சார்பில் கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநில அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு தொகுப்புகள் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சித்தூர் மாவட்டம், ஜம்புவாரிபள்ளே ஊராட்சி சாந்திநகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

ஊட்டச்சத்து தொகுப்பில் பாம்பு

அதில் மானசா என்ற கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து தொகுப்பில் பேரிச்சம்பழம் பாக்கெட் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது. இதை பார்த்த கர்ப்பிணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தொகுப்பு பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content