ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த விலங்கியல் நிபுணர்!

40ற்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை டார்க் இன்டர்நெட்டில் பதிவேற்றிய விலங்கியர் நிபுணர்.

51 வயதாகும் ஆடம் பிரிட்டன் BBC மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார். வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். முதலைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ’முதலை’ மனிதர் என்றும் பரவலாக அறியப்படுகிறார்.

ஆனால் எவரும் அறியாத இன்னொரு முகம் அவருக்கு உண்டு. விலங்குகளை அதிலும் குறிப்பாக நாய்களை குறிவைத்து பலாத்காரம் செய்ததும், அவை தொடர்பான வீடியோக்களை இருள் இணையத்திலும் பதிவேற்றியதுமாக பகீரிடச் செய்திருக்கிறார் ஆடம் பிரிட்டன். வடக்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக 4 குற்றங்கள் ஆகியவற்றை ஆடம் பிரிட்டன் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

Adam Britton: British croc expert admits sexually abusing dogs - BBC News

விலங்குகளை பலாத்காரம் செய்து அதன் மூலமாக துன்புறுத்தி இன்பம் காண்பவராக அவர் அறியப்பட்டதில், விசாரணை நீதிமன்றமே அதிர்ச்சியிர் ஆழ்ந்தது. இதனால் தலைமை நீதிபதி மைக்கேல் கிராண்ட், வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க ஆரம்பித்ததும், பலமுறை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை நீதிமன்றத்தின் கூடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

See also  லெபனானை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா உதவி

பிரிட்டனில் பிறந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஆடம் பிரிட்டன், 2014 முதல் தனது கோர நடவடிக்கைகளை அங்கு அரங்கேற்றி வந்திருக்கிறார். நாய்கள் மீது தனி மோகம் கொண்ட இவர், இதற்கென ’டார்ச்சர் ரூம்’ என பிரத்யேக அறையை வடிவமைத்து அதில் நாய்களை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார். தனது முகத்தை மறைத்தபடி அவற்றை வீடியோக்கள் எடுத்து இருள் இணையத்தில் பதிவேற்றி வந்துள்ளார். இவரைப் போன்று உலகம் முழுமைக்கும் ஒளிந்திருக்கும் சேடிஸ்டுகளை டெலகிராம் குழு ஒன்றின் வாயிலாகவும் ஒருங்கிணைத்திருக்கிறார்.

நாய்

வீடுகளில் வளர்க்கப்படும் செழிப்பான நாய்கள் தன்னைத் தேடிவர, தனியாக இணையத்தில் பொறி வைத்திருக்கிறார். வெகுதொலைவுக்கு வீடுகள் குடிமாறும்போது தாங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாதவர்களுக்கு என தனியாக பராமரிப்பு மையத்தை செயல்படுத்துவதாக இணையத்தில் தூண்டில் போட்டார். அப்படி வந்த நாய்களை பாலியல் சித்ரவதை செய்து கொன்றுள்ளார். அந்த நாய்களின் பழைய புகைப்படங்களை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்து, ஏமாற்றியும் வந்திருக்கிறார்.

See also  லெபனானை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா உதவி

உலகமறிந்த விலங்கு நிபுணராக ஆடம் பிரிட்டன் விளங்குவதால் அவர் மீது எவருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆனபோதும், பெண் ஒருவர் ஆடம் பிரிட்டனின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பாக அளித்த புகாரில், கடந்தாண்டு ஏப்ரலில் ஆடம் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதில் ஆடம் பிரிட்டனுக்கு எதிரான வழக்கு தற்போது வேகமெடுத்திருக்கிறது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content