கொலை சம்பவம் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை
கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் நால்வருக்கு இன்று (11) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி மதீனகந்த பிரதேசத்தில் களுத்துறை கலமுல்ல, ரிதி மாவத்தையில் வசிக்கும் நபர் ஒருவரை கூரிய மற்றும் மொட்டையான ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்து அவரது இளைய சகோதரனை தாக்கி படுகாயப்படுத்தியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதன்படி, வழக்கில் 1, 2, 3 மற்றும் 5வது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தும், 6 மற்றும் 7வது பிரதிவாதிகளை விடுதலை செய்தும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4வது பிரதிவாதி தற்போது உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் உண்மைகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)





