இலங்கை

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (07.09) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பெற்றோர் சார்பில் முன்னிலையான சட்டதரணி, சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதி வெளிநாட்டிற்கு செல்லாத வகையில் பயணத்தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் தாதிக்கு பயணத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content