இலங்கை

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு – சந்தேகநபர் தப்பியோட்டம்!

போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றின் போது, இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொரளை – வனாத்தமுல்ல பிரதேசத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகிழுந்து ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, அவருடன் மகிழுந்தில் இருந்த மற்றுமொரு நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும், அதனையடுத்து பொலிஸார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சந்தேகநபர்கள் மகிழுந்தில் தப்பிச் சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் தப்பிச்சென்ற மகிழுந்து பேலியகொடை – பராக்கிரம மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!