இந்தியா செய்தி

மருத்துவ மாணவர் ஒருவர் விதைப்பையை அறுத்துக் கொண்டு தற்கொலை

இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

20 வயதுடைய இந்த மாணவன் யாதகிரிகுட்டாவில் உள்ள தனது வீட்டில் தனது விதைப்பைகளை துண்டித்து தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மருத்துவ மாணவர் மன அழுத்தத்திற்கு சில காலமாக மருந்து உட்கொண்டிருந்ததாகவும், பின்னர் அதனை தானே நிறுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இஷ்டத்துக்கு மருந்தை நிறுத்துவது தற்கொலைக்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ மாணவர் தீக்ஷித் ரெட்டி, தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார், அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது, விரைகள் உடைந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.

நீண்ட நேரம் இரத்தம் வெளியேறியதாலும், வைத்தியசாலையில் அனுமதித்ததில் தாமதம் ஏற்பட்டதாலும் இந்த மாணவரின் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் ஹைதராபாத் காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் தற்கொலைக்கு முயன்றார், அது தோல்வியுற்றது, அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காகடியா மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுக் கொண்டிருந்த டி. ப்ரீத்தி என்ற மாணவியும், தெலுங்கானா மாநிலத்தில் மேலும் இரு மருத்துவர்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவை மார்ச் மாதத்தில் நடந்த சம்பவங்கள் ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 21 வயதான மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் எம். சனத் மற்றும் நான்காம் ஆண்டு மாணவியான 22 வயதான தாஷாரி ஹர்ஷா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டவர்களில் அடங்குவர்.

இந்த ஆண்டு பல மருத்துவ மாணவர்கள் தற்கொலையை நாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இது விரைவில் ஒரு சோகமான சூழ்நிலையாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி