இலங்கை

தேசிய கடன் மறுசீரமைப்பு : எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இராஜினாமா செய்தால், புதியவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானித்தார்.

அன்று அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இன்று அதனை எதிர்க்கின்றனர். அரசியலமைப்பில் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை அரசியலுக்காக பாவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சில விடயங்களைக் கையாளும் போது தேசிய இணக்கப்பாடு அவசியமாகும். எனவே பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளின் போதும் அவ்வாறு தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content