இலங்கை செய்தி

முல்லைத்தீவில் கோரவிபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் இன்று (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வண்டியும் தீப்பிடித்துள்ளதுடன், தீயினால் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் முற்றாக எரிந்துள்ளது.

கெப் வண்டியின் பின்பகுதியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் எஸ்.குமார் என்ற 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மல்லாவி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!