இலங்கை

படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல துப்பாக்கிச்சூட்டு வன்முறையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக இளைஞர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் இளைஞர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், மினுவாங்கொடை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய இடங்களில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் போது பிரதி பாடசாலை அதிபர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்