ஐரோப்பா

அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை

துனிசியாவுக்கு பிரான்ஸ் தரப்பில் கிட்டத்தட்ட 26 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக ஆபிரிக்காவில் இருந்து துனிசியாவுக்கு அகதிகள் படையெடுத்து வருகின்றனர்.

பின்னர் அங்கிருந்து பிரான்ஸிற்குள் நுழைகின்றனர். இதனால் பிரான்ஸ்-துனிசியா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

25.8 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டதாகவும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த துனிசியாவுக்கு இந்த தொகை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பிரித்தானிய பிரதமர் பிரான்ஸிற்கு வருகை தந்திருந்தபோது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தார்.

பின்னர் இருவரும் பிரான்சில் இருந்து இங்கிலாந்து நோக்கி கடல் மார்க்கமாக செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!