இலங்கை

uk வின் GSP திட்டத்திற்கு பதிலாக அமுலுக்கு வந்த புதிய திட்டம்!

ஐக்கிய இராச்சியத்தின்  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின்  புதிய வர்த்தகத் திட்டம் (DCTS) இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தற்போதைய விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு (GSP) பதிலாக இந்த திட்டம் அமுலுக்கு வருகின்றது.

டி.சி.டி.எஸ் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டம்+ (ஜி.எஸ்.பி.) ஐ மாற்றுவதாகும்.

இந்த புதிய திட்டமானது   92 சதவீத பொருட்களுக்கு இங்கிலாந்துடன் சுங்கவரியின்றி வர்த்தகம் செய்ய இலங்கையை அனுமதிக்கிறது.

இது இங்கிலாந்து சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும்  உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. .

கூடுதலாக, அரைக்கப்பட்ட தானியங்கள், செல்லப்பிராணி உணவு பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட கூடுதல் பொருட்கள் புதிய திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஏற்ப இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்