இறங்க மறுக்கும் ஈரான்! நடக்கப்போவது என்ன?
ஈரான் தனது நாட்டின் மீதான தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு உத்தரவாதத்தையும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க பொருளாதாரத் தடைகளை நீக்குவதையும் முதன்மையாகக் கோரியுள்ளது எனத் தெரியவருகின்றது.
எனினும், இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இத்தகைய பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
குறிப்பாக, அமெரிக்க-இஸ்ரேல் மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈரான், உடனடி நிதி நிவாரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
பாதுகாப்பு உத்தரவாதம், தடை நீக்கம் உள்ளிட்டவை ஏற்கப்படாவிடின், எந்தவொரு சமரசத்தையும் ஈரான் ஏற்காது என்பது உறுதி.
இது விடயத்தில் அமெரிக்கா விட்டுக்கொடுப்புக்கு முன்வந்தால்கூட அதற்கு இஸ்ரேல் இடமளிக்குமா என்பதே தற்போது எழும் பெரும் கேள்வி என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





