அரசியல் இலங்கை செய்தி

செப்டம்பரில் இலங்கைக்கு ஆபத்து: எதிரணி எச்சரிக்கை!

“எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும். கோட்டாபய – 02 நிலைமைக்கூட தோற்றம்பெறலாம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு ,

“டொலரைக்கூட முறையாக நிர்வாகிக்க முடியாத ஆட்சியே இது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும்போது பாரிய பிரச்சினையை இந்நாடு எதிர்கொள்ள நேரிடும். இதனை அநுரகுமார திஸாநாயக்கவால் நிர்வகிக்க முடியாமல்போகும்.

நான் இன்று இரகசியமொன்றைக் குறிப்பிடுகின்றேன். அதாவது “மூன்றெழுத்து” தொடர்பில் அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த அரசாங்கம் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கும்.

மூன்றெழுத்து என்றால் என்னவென்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எஸ்ஜேபியோ அல்லது யுன்பியோ கிடையாது.

அந்த மூன்றெழுத்துடன் தீர்க்கமான முடிவுக்கு சென்ற பிறகு, நாட்டில் கோட்டாபய -02 உருவாகும். நாம் கூறிய அனைத்தும் நடந்துள்ளது.” – என்றார் நிரோஷன் பாதுக்க.

நிரோஷன் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பதுடன், மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை