“ஐரோப்பிய நாடுகள் மாபெரும் தவறு செய்துள்ளன” – அமெரிக்க தூதர் சாடல்!
ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு உதவாதது மாபெரும் தவறு என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புட்சர் (Andrew Pudzer) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பியர்களுக்கு உதவ வேண்டிய கடமை நேட்டோவிற்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா முதன்முதலில் ஈரான் மீது போர் தொடுத்தபோது, நேட்டோ நாடுகள் அதற்கு உதவ முன்வராததால் ட்ரம்ப் இன்னும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், இராணுவத் தளங்களை அமெரிக்க துருப்புக்கள் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.




