இலங்கை

நாவலப்பிட்டியவில் சோகம் : முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்து விபத்து – மூவர் பலி!

நாவலப்பிட்டிய -மாபகந்த பகுதியில் மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவர், அவருடைய தாய் மற்றும் மற்றொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டி ஓட்டுநர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த மரம் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மரம்  சில காலமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நவலப்பிட்டிய போலீசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!