யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்!
யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கள்மீது மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கட்டளையைமீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பயணித்த மோட்டார் சைக்கிளை, பொலிஸார் துரத்தி வந்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மேற்படி மோட்டார் சைக்கிளானது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதன்போது அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரால் துரத்திவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.




