ஹோர்முஸ் நீரிணை வழியாக 24 மணி நேரத்தில் 28 கப்பல்கள் பயணம் – ஐஆர்ஜிசி தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் உட்பட மொத்தம் 28 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாகக் கடந்து சென்றதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.
ஐஆர்ஜிசி கடற்படையின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் இந்தக் கப்பல் போக்குவரத்து நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தொடர்ச்சியாக, உறுதியுடனும் அதிகாரத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





