ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!
ஈரான்மீது புதிய மற்றும் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி விதித்துள்ளது.
இதற்கமைய ஈரானின் கடல்சார் அமைப்பான PGSA உடன் வணிகம் செய்பவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அந்த அமைப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது.
குறிப்பாக, ஈரானிய விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் தரையிறங்குவதையும் எரிபொருள் நிரப்புவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
ஈரானின் வருமான ஆதாரங்களை முடக்குவதன் மூலம் அந்த நாட்டை பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதே இந்தத் தடைகளின் முக்கிய நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சுமூகமான முடிவு எட்டப்படும் வரை ஈரான்மீதான தடைகள் தொடரும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.





