மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!
மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ள நிலையிலேயே, எதிரணி தலைவர்கள் இணைந்து, இவ்வருடத்துக்குள் தேர்தலை கோரியுள்ளனர்.
தேவையான சட்டத்திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளுமாறும், பழைய முறைமையிலாவது தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினர்.





