போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவசரமில்லை!! இலக்குகளுக்கே முன்னுரிமை!
06 வாரக் கால போர் நிறுத்தத்தின்போது ஈரான் தனது இராணுவத் தொழில் தளத்தை மீண்டும் கட்டமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“மறுசீரமைப்புக்காக உளவுத்துறை சமூகம் (IC) நிர்ணயித்திருந்த அனைத்து காலக்கெடுவையும் ஈரானியர்கள் மீறிவிட்டனர்,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், போரை முடிப்பதற்கான காலக்கெடுவை விட பணி நோக்கங்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான் மத்திய கிழக்குக்கு அப்பால் போரை விரிவுபடுத்துவோம் என்றும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் சரணடைய மாட்டோம் என்றும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
இவ்வாறான முரண்பட்ட சூழ்நிலைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளதுடன், மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





