இலங்கை செய்தி

” மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் NPP அரசே பொறுப்பு கூறவேண்டும்”

“புலிகளை நினைவுருவதற்கு இடமளிப்பதானது பாரதூரமான பிரச்சினையாகும். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் அதற்குரிய முழு பொறுப்பையும் என்.பி.பி. அரசாங்கம் ஏற்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வெள்ளவத்தையில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும். நகைச்சுவையாக கருதி, கடந்துசெல்ல முடியாது.

இவ்வாறு பிரபாகரனையும், புலிகளையும் நினைவுகூருவதற்கு இடமளிப்பதானது, மீண்டுமொரு பிரபாகரன் உருவாவதற்கு வழிவகுக்கக்கூடும்.

அவ்வாறு புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கினால் அதற்குரிய முழு பொறுப்பையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அல் கைதா அமைப்பை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. ஜேர்மனியில் இன்றளவிலும் ஹிட்லரை நினைவுகூருவதற்கு அனுமதி இல்லை.

ஆனால் இங்கே தமிழ் வாக்குகளை குறிவைத்து பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் பிரிவினைவாத புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தும் வகையிலேயே செயல்பட்டுவருகின்றது. ” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!