எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் அமெரிக்கர்களும் பாதிப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் சுமார் ஆறு அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நோய்ப் பரவலை உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது.
எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் 91 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த நோயால் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக கொங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொங்கோவில் உள்ள சிறிய அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மையத்துக்கு மாற்ற அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





