ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும்.

இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம்  என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களைக் கையாள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!