பொலிவிய ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : இராணுவத்தினர் குவிப்பு!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய ஜனாதிபதியான ரொட்ரிகோ பாஸின் (Rodrigo Paz) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தலைநகர் லா பாஸில் ஒன்றுக்கூடிய சுரங்க தொழிலாளர்கள் பிரமாண்ட பேரணிகளை நடத்தியுள்ளனர். இதில் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுக்களை வீசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




