“முள்ளிவாய்க்கால் இன அழிப்பு” – செட்டிகுளத்தில் உருகிய நெஞ்சங்கள்!
முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக, செட்டிகுளம் அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தையும், செட்டிகுளம் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு வண. ராஜீ சர்மாவும் தீபச் சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
செட்டிகுளம் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் திரண்டு, 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் உணவின்றி, நீரின்றி, மருந்தின்றி மடிந்த உறவுகளை நினைவுகூர்ந்தனர்.






