ரயில் தடம் புரண்டு விபத்து – 12 பேர் காயம்!
வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலே இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.
அதேநேரம் படுகாயமடைந்த பயணி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




