இரவோடு இரவாக மோதிக்கொண்ட உக்ரைன் – ரஷ்யா : பற்றி எரிந்த ஆலை!
உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து ரியாசானில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதளில் ரியாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமைடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரேனின் ஆளில்லா விமானப் படைத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) மேற்படி தாக்குதலை உறுதிப்படுத்தினார்.
அதேநேரம் உக்ரேனில் உள்ள 23 இராணுவ இலக்குகள் மற்றும் வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே 355 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.





