ஹோர்முஸ் நீரிணை தேசிய இறையாண்மையின் ஒரு பகுதி என ஈரான் வலியுறுத்தல்
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை தனது தேசிய இறையாண்மையின் ஒரு பகுதியாகவே கருதுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தெஹ்ரானில் இருந்து தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர், அமெரிக்கா விதித்த முற்றுகை மற்றும் தொடரும் பிராந்தியப் போர் சூழ்நிலை காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் “புதிய சமன்பாடு” உருவாகியுள்ளது என ஈரானிய அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறினார்.
அந்த முக்கிய கடல் வழித்தடத்தின் மீது தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கு திறந்தே இருக்கும் என்றாலும், அது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை மற்றும் ஈரான் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று தெஹ்ரான் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்கு திரும்பாது என்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் முன்வைக்கும் நிலைப்பாடு மற்றும் அமெரிக்கா, மேலும் பிற வளைகுடா நாடுகள் வெளியிடும் கருத்துக்கள் இடையே தற்போது பெரிய கருத்து வேறுபாடு நிலவி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





