உலகம் செய்தி

தெற்கு லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு 

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள நான்கு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பகுதிகளில் விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அர்ஸூன், தயிர் தெப்பா, பஸூரியே மற்றும் அல்-ஹௌஷ் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் தொடர்ந்து இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இடப்பெயர்வு உத்தரவுகள், அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!